Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் தீ பரவல் - 16 பேர் பலி!

இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் தீ பரவல் - 16 பேர் பலி!

29 மார்கழி 2025 திங்கள் 19:01 | பார்வைகள் : 191


இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள மனடோ நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தீ பரவல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவு 08.31 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தீ பரவலின் போது மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், அந்நாட்டு தீயணைப்பு படையினர் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவலுக்கான காரணத்தை கண்டறிய அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்