Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை

28 மார்கழி 2025 ஞாயிறு 03:28 | பார்வைகள் : 224


உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் நேற்றைய (27) நிலவரப்படி, உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,553 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில், இலங்கையில் நேற்று (27) மாத்திரம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் மாத்திரம் 12,000 ரூபாவினால் தங்க விலை அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, நேற்றைய தினம் 329,300 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 340,400 ரூபாவாக அதிகரித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்