Paristamil Navigation Paristamil advert login

விவாகரத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த வேதனை!

விவாகரத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த வேதனை!

21 கார்த்திகை 2025 வெள்ளி 16:26 | பார்வைகள் : 123


சினிமா புகழ் தனது குடும்ப வாழ்க்கையை பாதித்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சினிமா புகழ் தனது குடும்ப வாழ்க்கையை கடுமையாக பாதித்ததாகவும், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதைத் தடுத்ததாகவும் தெரிவித்தார். இதனால், கடந்த ஆண்டு தனது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிந்து மனைவி சாய்ரா பானுவைப் பிரிந்ததாகக் கூறினார். தனது மூன்று பிள்ளைகளும் மனைவி சாய்ராவின் பராமரிப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அரிதாகவே வெளியிடங்களுக்குச் செல்வதாகவும், அப்படிச் செல்லும் போது கூட புகைப்படம், செல்பி கேட்கும் ரசிகர்களை சமாளிப்பது கடினமாக இருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டார். உணவு விடுதி அல்லது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்வுகளில் உணவருந்தக் கூட ரசிகர்கள் விடுவதில்லை எனவும், தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகக் கூறினாலும் அதை பொருட்படுத்தாமல் செல்பி எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், தன்னிடம் புகைப்படம் எடுக்க வரும் ரசிகர்களை முகத்தில் அடித்தார் போல் ஹாலிவுட் நடிகர்கள் கண்டிக்கும் நிலையில், இந்திய நடிகர்கள் அதில் மாறுபட்டு இருப்பதாக ரஹ்மான் தெரிவித்தார். அனைத்து இயக்குநர்களும் தனக்கு நண்பர்கள் என்றும் வேலைப்பளுவால் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது கடினமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், குடும்ப உறுப்பினர்களும் அவர்களுக்கான வாழ்க்கையில் தீவிரம் காட்டி வருவதால் அவர்களை ஒன்றிணைத்து உணவு விருந்துகளில் கலந்து கொள்வதும் கடினமாக உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்