Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கணவன் மரணம்: மனைவி எடுத்த தவறான முடிவு: 3 பிள்ளைகளின் பரிதாப நிலை

இலங்கையில் கணவன் மரணம்: மனைவி எடுத்த தவறான முடிவு: 3 பிள்ளைகளின் பரிதாப நிலை

19 புரட்டாசி 2025 வெள்ளி 10:12 | பார்வைகள் : 2405


32 வயதான தாய் ஒருவர், தவறான முடிவை எடுத்து தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம், உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அவரது கணவர் (வயது 34) இரண்டு நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார்.  இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.  

அதேநேரம் 05, 10 மற்றும் 12 வயதான மூன்று ஆண் பிள்ளைகளும்   இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், பிள்ளைகள் தற்போது உடுதும்பர பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னுயிரை மாய்த்துக்கொண்ட பெண்ணும் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.