100 Qubit Quantum கணிப்பொறி மையத்தை உருவாக்கும் இந்தியா

22 ஆடி 2025 செவ்வாய் 15:53 | பார்வைகள் : 799
இந்தியாவில் 100 க்யூபிட் குவாண்டம் கணிப்பொறி மையம் உருவாகிறது.
இந்தியாவின் குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சி திறன்களை வளர்க்கும் நோக்கில், மத்திய அரசு 50 முதல் 100 க்யூபிட் திறன் கொண்ட சூப்பர் கண்டக்டிங் குவாண்டம் கணிப்பொறி மையம் ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளது.
இந்த மையம் இந்திய ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்புகளுக்காக உருவாக்கப்படுகிறது.
இது தேசிய அளவில் ஒரு ரெஃபரன்ஸ் மையமாக செயல்பட்டு, உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை பரிசோதிக்கவும், கூட்டாக உருவாக்கவும் பயன்படும்.
Qubit (Quantum Bit) என்பது ஒரே நேரத்தில் 0 மற்றும் 1 நிலைகளை நிலைநிறுத்தக்கூடிய ஒரு குவாண்டம் கணிப்பொறியின் அடிப்படை அலகாகும்.
இது பாரம்பரிய கணிப்பொறிகளுடன் ஒப்பிடும் போது பல மடங்கு வேகமான மற்றும் திறமையான கணக்கீடுகளை செய்யக் கூடியது.
மையத்தின் அம்சங்கள்:
C-DAC (Centre for Development of Advanced Computing) நிறுவனத்தின் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி வளாகத்தில் இந்த மையம் உருவாக்கப்படுகிறது.
க்யூபிட் செயலி (QPU) 99.7% ஒற்றை க்யூபிட் செயல்திறன் மற்றும் 99% இரட்டை க்யூபிட் செயல்திறனை கொண்டு இருக்க வேண்டும்.
250 க்யூபிட் வரை விரிவாக்கத்துக்கு ஏற்ற கட்டமைப்புடன் அமைக்கப்படும்.
அனைத்து கூறுகளும் தனி விற்பனையாளர்களிடமிருந்து பெறப்படும் திறந்த கட்டமைப்பு முறை (open architecture).
எதிர்கால திட்டங்கள்
இந்த மையம் மட்டுமல்லாமல், கட்டுப்பாட்டு எலக்ட்ரானிக்ஸ், குளிர்சாதன அமைப்புகள், மென்பொருள் மற்றும் ஆல்கொரிதம் வளர்ப்பு போன்ற துறைகளிலும் கூட்டு மேம்பாட்டு வாய்ப்புகளை அரசு ஏற்க முனைகிறது.
இந்த முயற்சி, இந்தியாவை குவாண்டம் கணிப்பொறி தொழில்நுட்பத்தில் முன்னணி நாடுகளின் பட்டியலில் சேர்க்கும் வகையில் ஒரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1