வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து பெரும் விபத்து - 37 பேர் வரை பலியான சோகம்!
20 ஆடி 2025 ஞாயிறு 11:12 | பார்வைகள் : 4479
ஹா லாங் விரிகுடாவில் நிகழ்ந்த படகு விபத்தில் டஜன் கணக்கானோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமின் புகழ்பெற்ற ஹா லாங் விரிகுடாவில் சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த ஒரு பயங்கர கடல் விபத்தில், 'வொண்டர் சீ' என்ற சுற்றுலா படகு கவிழ்ந்ததில் குறைந்தது 37 பேர் உயிரிழந்தனர்.
அரசு ஊடக அறிக்கைகளின்படி, ஐந்து படகு ஊழியர்கள் உட்பட 53 பேரை ஏற்றிச் சென்ற அந்தப் படகு, விஃபா புயலின் அண்மைய வருகையுடன் தொடர்புடைய கடுமையான வானிலை காரணமாகக் கவிழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணியளவில் (கிரீன்விச் நேரம் காலை 7 மணி) பிரபலமான சுற்றுலாத் தலத்தில் பலத்த காற்று வீசியபோது நிகழ்ந்துள்ளது.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 37 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் குறைந்தது எட்டு குழந்தைகள் அடங்குவர். 11 பேர் உயிர் பிழைத்துள்ளனர். அவர்களில் 14 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவார்.
சிறுவன் தலைகீழாக கவிழ்ந்த படகின் உட்புறத்தில் நான்கு மணி நேரம் சிக்கித் தவித்த பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
உள்ளூர் எல்லைப் பாதுகாப்புப் படையினரை மேற்கோள்காட்டி அதிகாரிகள், தொடர்ச்சியான தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் காரணமாக உயிரிழந்தவர்களின் தேசிய விவரங்கள் குறித்து இன்னும் விரிவான தகவல்களை வெளியிடவில்லை.
ஆரம்ப அறிக்கைகளின்படி, படகில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் வியட்நாமின் தலைநகரான ஹனோயில் இருந்து வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் என்றும், பயணிகளில் சுமார் 20 குழந்தைகள் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan