பூங்காவில் அரிய ஊதா நிற நண்டு கண்டுபிடிப்பு.....
15 ஆவணி 2025 வெள்ளி 09:27 | பார்வைகள் : 1298
தேசிய பூங்காவில் அரிய ஊதா நிற நண்டு காணப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாக மாறியுள்ளது.
தாய்லாந்தின் கெய்ங் கிராச்சன் தேசிய பூங்காவில் (Kaeng Krachan National Park ) ஒரு அரிய நண்டு இனம் ஊதா நிறத்தில் காணப்பட்டதால் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை, "இயற்கையின் விலைமதிப்பற்ற பரிசு" என்று அதிகாரிகள் வர்ணித்தது மட்டுமல்லாமல், இந்த வகை இனம் மிகவும் அரிதானது என்றும் கூறியுள்ளனர்.
இந்த அரிய வகை நண்டை கண்டுபிடித்து பூங்கா ரேஞ்சர்கள் புகைப்படம் எடுத்துள்ளது.
இந்த அரிதான நீர்வீழ்ச்சி நண்டு இனமான "Sirindhorn Crab" என்றும் அழைக்கப்படும் 'கிங் நண்டின்' கடைசிப் பார்வையை அதிகாரிகள் படம் பிடித்தனர். இந்த நண்டு வெள்ளை மற்றும் ஊதா நிறங்களை கொண்டுள்ளது.
தாய்லாந்தின் இளவரசி மகா சக்ரி சிரிந்தோர்னின் பெயரிடப்பட்ட இந்த நண்டு பொதுவாக "இளவரசி" அல்லது "சிரிந்தோர்ன்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த நண்டு இனம் பாண்டா நண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த நண்டுகள் பொதுவாக அவற்றின் வெள்ளை மற்றும் கருப்பு வடிவங்களுக்கு பெயர் பெற்றவை. இவை இந்த இனத்தின் அசாதாரண மாறுபாடு ஆகும்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan