அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன?
9 ஆவணி 2025 சனி 17:32 | பார்வைகள் : 2951
அதிக கொலஸ்ட்ரால் என்பது பெரும்பாலும் ‘சைலன்ட் கில்லர்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் அதிக கொலஸ்ட்ரால் என்பது பொதுவாக எந்த ஒரு அறிகுறிகளையும் காட்டாது மற்றும் அறிகுறிகளை காட்டும் போது ஏற்கனவே பெரும்பாலான சேதம் செய்யப்பட்டு இருக்கும். உதாரணமாக ஹார்ட் அட்டாக் அல்லது பக்கவாதம். ஒவ்வொரு வருடமும் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக 3.6 மில்லியன் இறப்புகள் ஏற்படுகிறது. எனவே அதை ஆரம்பநிலையிலேயே கண்டறியது உரிய சிகிச்சை பெறுவதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். அப்படி உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கண் இமைகள் மீது மஞ்சள் நிற படிவுகள்: கண்கள் அல்லது கண்களை சுற்றி உள்ள கண் இமைகளில் மஞ்சள் நிற படிவுகள் இருந்தால் அது அதிக கொலஸ்ட்ராலுக்கான ஒரு அறிகுறியாக அமைகிறது. இந்த கொழுப்பு நிறைந்த படிவுகள் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக சருமத்தின் கீழ் குவிகிறது. அதிலும் குறிப்பாக கண்களுக்கு அருகில் இது ஏற்படுகிறது. இது பெரும்பாலும் தீங்கு இல்லாதது என்றாலும் கூட, இது அதிக கொலஸ்ட்ராலுக்கான ஒரு அறிகுறி.
நடக்கும் போது கால் வலி: அடிக்கடி உங்களுடைய கன்று தசைகளில் வலி அல்லது சுளுக்கு, அதிலும் குறிப்பாக நடக்கும் போது வலி ஏற்படுகிறதா? ஓய்வு எடுத்த பிறகு இந்த வலி மறைந்து விடுகிறதா? அப்படி என்றால், இதற்கு காரணம் பெரிபரல் ஆர்டரி டிசிஸ் (Peripheral artery disease) ஆக இருக்கலாம். இது பெரும்பாலும் கால்களில் உள்ள தமனிகளை சுருங்க செய்யும் கொலஸ்ட்ரால் காரணமாக ஏற்படுகிறது. இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக லிப்பிட் சோதனை செய்து பார்ப்பது நல்லது.
நெஞ்சில் அசௌகரியம் அல்லது அழுத்தம்: எப்போதாவது ஒருமுறை நெஞ்சில் அசௌகரியம் அல்லது லேசான இறுக்கத்தை கவனித்தால் அதிலும் குறிப்பாக ஏதாவது உடல் செயல்பாடு செய்து கொண்டிருக்கும் போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் போது இது ஏற்பட்டால் கொலஸ்ட்ரால் தமனிகளில் ஏற்படுத்திய அடைப்பு காரணமாக இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறைந்ததன் அறிகுறி இதுவாகும். இது ஆஞ்சினா என்று அழைக்கப்படுகிறது. இதனை அலட்சியப்படுத்தக் கூடாது. நெஞ்சில் லேசான அசௌகரியம் அல்லது அழுத்தம் இருந்தால் கூட உடனடியாக மருத்துவரை அணுகவும்.
கைகள் மற்றும் கால்களில் மரத்துப்போன உணர்வு அல்லது குளிர்ந்த உணர்வு: கைகள் அல்லது கால்களில் அடிக்கடி மரத்துப்போன உணர்வு ஏற்படுகிறதா? இது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக குமிதன் காரணமாக ஏற்பட்ட குறைவான ரத்த ஓட்டத்தின் அறிகுறி ஆகும். மோசமான ரத்த ஓட்டம் என்பது தமனிகளில் அடைப்புகள் இருப்பதற்கான ஒரு முக்கியமான அறிகுறி. இதனை நீங்கள் அலட்சியப்படுத்தக் கூடாது.
ஆண்களில் விறைப்புத்தன்மை: ஆண்களில் விறைப்புத்தன்மை என்பது வயது அல்லது மன அழுத்தம் காரணமாக ஏற்படக்கூடியது என்றாலும் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக ஏற்பட்ட மோசமான ரத்த ஓட்டம் மற்றும் சுருங்கிய தமனிகளின் ஆரம்ப கால அறிகுறி இது. ஆண்குறியில் உள்ள ரத்த நாளங்கள் என்பது அடைப்புக்கான அறிகுறியை முதலில் வெளிப்படுத்த ஆரம்பிக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan