Montreuil : அகதி ஒருவரை சுத்தியலால் தாக்கி கொன்ற நபர்..!!
9 ஆவணி 2025 சனி 12:04 | பார்வைகள் : 8304
நேற்று ஓகஸ்ட் 8, வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் Montreuil நகர காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த நபர் அகதி ஒருவரை சுத்தியலால் தாக்கி படுகொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்து, காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். பின்னர் காவல்துறையினர் Montreuil (Seine-Saint-Denis) நகரில் உள்ள அகதிகள் தங்கியிருந்த இடம் ஒன்றுக்கு விரைந்து சென்றனர்.
அங்குள்ள வீடொன்றில் அகதி ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சடலம் மீட்கப்பட்டது.
சரணடைந்த நபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருத்ந்தது. முன்னதாக குறித்த நபர் வீதி ஒன்றில் 'மினியேச்சர்' பொருட்கள் விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan