Argenteuil : துப்பாக்கிச்சூட்டில் தாய் - மகன் பலி!! - ஒருவர் கைது!!
23 ஆனி 2025 திங்கள் 16:12 | பார்வைகள் : 4296
Argenteuil நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தாய் - மகன் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, Argenteuil (Val-d'Oise) நகரில் உள்ள வீடொன்றுக்கு விரைந்து சென்றனர். அங்கு வயது குறிப்பிடப்படாத பெண் ஒருவரும், அவரது மகனும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர்.
அவர்களது சடலத்தை மீட்ட காவல்துறையினர், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்தனர். இரவு 9 மணி அளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்தை வந்தடையும் முன்னரே அவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan