மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
19 ஆடி 2025 சனி 14:06 | பார்வைகள் : 1392
மியான்மரில் சனிக்கிழமை 19.07.2025 அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.7 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
தேசிய நில அதிர்வு மைய அறிக்கையின்படி, மியான்மரில் சனிக்கிழமை அதிகாலை பூமிக்கடியில் 105 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 அலகுகளாகப் பதிவானது.
எனினும், நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் என்ற எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம், பாதிப்பு குறித்த எந்த தகவல் வெளியாகவில்லை.
அதேவேளை முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் பூமிக்கடியில் 110 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவாகி இருந்தது. இதுபோன்ற கடந்த 17 ஆம் தேதி பூமிக்கடியில் 80 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவாகியிருந்தது. இந்த மாதத்தில் ஏற்பட்ட நான்காவது நிலநடுக்கம். ஜூலை 1 ஆம் திகதி பூமிக்கடியில் 135 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவாகியிருந்தது. மியான்மர் பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடாக இருந்தாலும், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிகாரப்பூர்வ தேசிய நிலநடுக்க ஆபத்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan