56 வயது பெண் அவரது வீட்டில் வைத்துப் படுகொலை

20 ஆனி 2025 வெள்ளி 03:00 | பார்வைகள் : 7571
லியோன் மாநகர பகுதியில் உள்ள வில்லுர்பானில் (VILLEURBANNE), அரவது வீட்டில் வைத்து 56 வயதான ஒரு பெண் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் பல காயங்களும் இருந்ததாக காவற்துறையினரின் தகவல் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவம் புதன்கிழமை நள்ளிரவில் நடந்ததாகவும், கொல்லப்பட்ட பெண்ணின் மகள், வீட்டுக்கு வந்தபோது தாயின் உடலை கண்டு அதிரச்சழயடைந்து உடனே காவற்துறையினரிற்குத் தகவல் அளித்துள்ளார்.
காவற்துறையினர் வந்தபோது, அந்தப் பெண்ணின் முகத்தில் பல காயங்கள் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் வீட்டில் திருட்டு நடந்ததற்கோ, பூட்டை உடைத்ததற்கோ எந்த அடையாளங்களும் காணப்படவில்லை.
அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றியல், இது ஒரு படுகொலை என்பதளை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் குற்றம் எவ்வாறு நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1