வாழ்ந்திடும் நொடிகள் யாவும்
5 வைகாசி 2025 திங்கள் 17:39 | பார்வைகள் : 3156
அன்றொருநாள் சென்றிருந்தேன் அவள் வீட்டிற்கு
அவள் வீட்டு கிழவனுக்கு அறுபதாம் திருமணமாம்
நண்பர்களுடன் சேர்த்து வந்த அழைப்பாதனால்
நடுங்காமல் சென்றேன் அவள் கூட்டிற்கு
வாசல் வந்தழைத்தாள் பொதுவாய் அனைவரையும்
வா என்னுடன் என்பதாய் தான் நான் கேட்டேன்
அறிமுகங்கள் யாவும் முறுவலாய் முறைப்பதாய் தோன்றிற்று
அவையாவும் துளியும் பிடிக்கவில்லை
யார் யாரோ யாராய் இருக்கட்டுமே
யார் கவலை கொண்டார்
அணிந்திருந்த ஆடையும்
அழகுற்ற புருவமும்
அளவளாவி செல்கின்ற திசையெல்லாம்
அடியேனும் சென்றேனே
கிழவனுடன் அறிமுகம்
கிழவியின் வெட்கச் சிரிப்பு
கால் தொட்டு ஆசிர்வாதம்
அருகிலேயே நின்றிருந்தாள் – பல்
அனைத்தையும் காட்டி சிரித்திருந்தாள்
நட்டு வைத்த மரங்களை காட்டினாள்
நா சுவைக்கும் அதன் ருசி கனிகளை அங்கலாய்த்தாள்
பக்கத்து வீட்டு சுட்டிகளை அறிமுகப் படுத்தினாள்
பல் காட்டி அவைகள் மாமா என்றதை ஓரமாய் இரசித்தாள்
சிறு வயது புகைப்படத்தை
சினுங்கி கொண்டே காட்டினாள்
ஓரக்கண் பார்வைதனை வீசுவதில் வல்லவள்
ஒய்யார நடையாய் அருகருகே வந்து போனாள்
இத்தனையும் நடந்தவை கூட்டத்தின் மத்தியில்
இவன் மட்டும் தனியனாய் அகிலம் ஓர் பக்கமாய்
அவள் கை பரிமாற உணவுகள் இலைதனில் தவழ
அவள் விழி பரிமாறும் மௌனங்கள் இருதயம் நுழைய
அச்சிறு விரல் தீண்டும் போதெல்லாம்
அப்படியோர் பூரிப்பு உள்ளத்தை நனைத்ததுவே
இதற்கெனவே பிறந்தவனாய் நிமிடத்தை தின்றேனே
இவள் கண் ருசித்திடவே நொடிப் பொழுதும் வாழ்ந்தேனே…
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan