Paristamil Navigation Paristamil advert login

இடி மின்னல் தாக்குதல்கள் : ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

இடி மின்னல் தாக்குதல்கள் : ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

30 சித்திரை 2025 புதன் 10:38 | பார்வைகள் : 5167


இன்று ஏப்ரல் 30, புதன்கிழமை இடி மின்னல் தாக்குதல் காரணமாக நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் தென் கிழம்மு மாவட்டங்களான Alpes-de-Haute-Provence,  Alpes-Maritimes, Corse-du-Sud, Haute-Corse, Doubs மற்றும் Jura ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகலின் பின்னர் நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நாட்டின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.