அமெரிக்காவின் சுங்கவரி அதிகரிப்புக்கு எதிராக - பரிசில் அவசர கூட்டம்!!
9 சித்திரை 2025 புதன் 16:30 | பார்வைகள் : 11171
அமெரிக்கா அறிவித்துள்ள சுங்கவரி கட்டண அதிகரிப்பை அடுத்து, பிரான்சில் ஜனாதிபதி மக்ரோன் தலைமையில் அவசர கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.
ஏப்ரல் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த கூட்டம் இடம்பெற உள்ளதாக ஊடக பேச்சாளர் Sophie Primas இன்று தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்கு சுங்கக்கட்டணம் 2-% சதவீதமாக அதிகரித்துள்ளது அமெரிக்கா. இந்த கட்டண அதிகரிப்பை அடுத்து, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் எனவும், இதனால் விற்பனை வீழ்ச்சியடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. ”பிரான்சின் பொருளாதார வளர்ச்சியில் என்ன தாக்கம் இடம்பெற உள்ளது. வேலை வாய்ப்பு பாதிக்கப்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் தெரியவில்லை. இந்த கூட்டத்தில் அது தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan