பராசக்தி படம் தொடர்பில் அதிரடி அறிவிப்பு!
5 சித்திரை 2025 சனி 14:58 | பார்வைகள் : 3097
சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் நடிக்க இவர்களுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் பிரித்விராஜன், பஸில் ஜோசப் ஆகியோரும் நடிக்கின்றனர். கடந்த 1965 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே மதுரை, சிதம்பரம், இலங்கை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது தற்போது இதனை அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை ஈசிஆரில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த படப்பிடிப்பிற்காக 1960 காலகட்டத்தில் இருந்த மதுரையைப் போன்ற பிரம்மாண்ட செட் அமைத்து முக்கியமான காட்சிகளை படமாக்க போகிறார்களாம். எனவே விரைவில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.
இதற்கிடையில் இப்படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan