குளியலறைக்குள் சிக்கிக்கொண்ட பெண்.. ஆறு நாட்களின் பின் மீட்பு!!
14 பங்குனி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 15233
ஆறு நாட்களாக குளியலறைக்குள் சிக்கிக்கொண்ட பெண் ஒருவர் ஆறு நாட்களின் பின்னர் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பிரான்சின் தெற்கு நகரமான Martigues (Bouches-du-Rhône) இல் இடம்பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் 70 வயதுடைய பெண் ஒருவர் தொடர்பில் தகவல் எதுவும் அறிய முடியவில்லை என கவலையுற்ற அவரின் மகன், வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவரை தொடர்புகொண்டு தாயார் குறித்து விசாரித்துள்ளார்.
வீட்டின் கதவினை திறக்க முடியவில்லை என பதில் வந்ததை அடுத்து, தீயணைப்பு படையினரை அழைத்துள்ளனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று தேடிய போது, குளியலறையில் குறித்த பெண் இருப்பதை கண்டறிந்தனர்.
ஆறு நாட்களுக்கு முன்பாக அவர் குளிப்பதற்காக சென்றிருந்த போது, குளியல் தொட்டியில் வழுக்கி விழுந்துள்ளார் எனவும், அதை அடுத்து அவரால் எழுந்து வெளியே வரமுடியவில்லை எனவும், அங்கே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பசிக்கும் போதெல்லாம் தண்ணீரை மட்டுமே பருகி உயிர்வாழ்ந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இடுப்பு எலும்பு உடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan