டென்னிஸ் போட்டியில் திடீரென மயங்கி விழுந்த பிரித்தானிய வீராங்கனை…!

3 சித்திரை 2025 வியாழன் 11:59 | பார்வைகள் : 1874
கொலம்பிய டென்னிஸ் போட்டியில் வீராங்கனை பிரான் ஜோன்ஸ் மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய டென்னிஸ் வீராங்கனை பிரான் ஜோன்ஸ்( Fran Jones), பொகோட்டாவில் நடந்த கோல்சனிடாஸ் கோப்பை(Colsanitas Cup) போட்டியில் அர்ஜென்டினாவின் ஜூலியா ரைராவுக்கு(Julia Riera) எதிரான போட்டியில் திடீரென மயங்கி விழுந்ததால் போட்டியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
24 வயதான அவர், முக்கியமான மூன்றாவது செட்டில் திடீரென மயங்கி விழுந்ததால் போட்டியிலிருந்து விலக வேண்டியதாயிற்று.
உலக தரவரிசையில் 129 வது இடத்தில் இருக்கும் ஜோன்ஸ், போட்டியின் கடைசி கட்டத்தில் மூச்சுத் திணறலால் மிகவும் சிரமப்பட்டார்.
இறுதியில் தரையில் விழுந்த அவர், இறுதியில் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார்.
பிரித்தானிய டென்னிஸ் வீராங்கனை விரைவில் குணமடைய நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று கோல்சனிடாஸ் கோப்பையின் அதிகாரப்பூர்வ X கணக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1