டிஜிட்டல் வாலட்டில் இருந்து பணத்தை எளிதாக அனுப்பலாம்.... யுபிஐ விதிகளை மாற்றிய RBI

30 மார்கழி 2024 திங்கள் 15:15 | பார்வைகள் : 3669
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இப்போது UPI Wallet மூலம் பணத்தை மாற்றுவதை இன்னும் எளிதாக்கியுள்ளது.
இப்போது வாடிக்கையாளர்கள் மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் தங்கள் Wallet-ஐ அணுக முடியும்.
அதாவது, எந்தவொரு செயலியிலும் வாலட்டில் இருந்து எந்த யுபிஐ செயலிக்கும் நீங்கள் பணத்தை மாற்ற முடியும்.
மூன்றாம் தரப்பு யுபிஐயில் இருந்து சரிபார்க்கப்பட்ட வாலட்களுக்கு பணம் செலுத்த / பரிமாற்றம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்காக, PPI-க்கள் அதாவது ப்ரீபெய்ட் கட்டண கருவிகளை வைத்திருப்பவர்கள் KYC செய்வது கட்டாயமாகும்.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்குப் பிறகு, வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிறுவனங்கள் தங்கள் PPI வாலட்களை வழங்க முடியும்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயல்முறையை எளிதாக்குவதற்காக ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சியை எடுத்துள்ளது.
இதன்மூலம் பிபிஐ வாலட்களில் யுபிஐயிலிருந்து பணம் செலுத்துவதை ஏற்றுக்கொண்டு யுபிஐ இயங்குதளத்தில் பணத்தை அனுப்பலாம்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1