பேருந்து சாரதி தற்கொலை... - Valérie Pécresse மீது விமர்சனம்!
18 மார்கழி 2024 புதன் 09:00 | பார்வைகள் : 6749
Val-d'Oise மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்து சாரதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது மரணம் தொடர்பில் இல் து பிரான்ஸ் மாகாண முதல்வரும், பொது போக்குவரத்துசபையின் தலைவருமான Valérie Pécresse மீது மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Val-d'Oise மாவட்டத்தில் கடந்த 40 நாட்களாக பேருந்து சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 14 ஆம் திகதி Ludovic L எனும் பேருந்து சாரதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
‘
FSO நிறுவனத்தில் பணிபுரியும் குறித்த சாரதியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவரது தற்கொலைக்கு இல் து பிரான்ஸ் பொதுபோக்குவரத்து சபையின் (Ile-de-France Mobilités) மெத்தனப்போக்கே காரணம் என La France Insoumise கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் அவர் பதிலளிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan