காலை உணவை தவிர்த்தால் என்னவாகும் தெரியுமா?
12 மார்கழி 2024 வியாழன் 10:42 | பார்வைகள் : 9068
சிலர் காலை உணவை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. பெரும்பாலானோர் காலையில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் அடிக்கடி காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் காலை உணவை தவிர்ப்பது மிகவும் ஆபத்தானது. இப்படி தொடர்ந்து செய்தால் டிமென்ஷியா வரும் ஆபத்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
டிமென்ஷியா என்பது ஒரு நபரின் சிந்தனை, நினைவாற்றல் மற்றும் இயல்பான நடத்தை ஆகியவற்றை பாதிக்கும் ஒரு மனநிலை நோயாகும். இதில் மூளையின் செல்கள் சேதமடைந்து, அதன் காரணமாக சரியாக செயல்பட முடியாமல் போகும். காலை உணவைத் தவிர்ப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
நோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்களின் தரவுகளின்படி, 2015 முதல் 2018 வரை, அமெரிக்கர்களில் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15 சதவீதம் பேர் தொடர்ந்து காலை உணவை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. காலை நேரம் அலுவலகம், கல்லூரி ஆகியவற்றுக்கு செல்லும் அவசரம். உண்ணாவிரதம் அல்லது எடை குறைப்பிற்காக சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் இது இன்னும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், பலரும் தங்கள் நாளை தினமும் உணவு சாப்பிட்டு தொடங்க விரும்புவதில்லை.
காலை உணவை தவிர்ப்பது மிகவும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி, கார்டிசோலின் சுரப்பை அதிகரிக்கிறது. இது காலப்போக்கில் வயிற்று கொழுப்பை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. மேலும் காலை உணவு உட்கொள்ளாதது இரத்த சர்க்கரை குறைவிற்கும் வழிவகுக்கிறது. மூளைக்கு உணவு தேவைப்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது. மூளைக்கு உணவு கிடைக்காவிட்டால், அதனால் தெளிவாக சிந்திக்க முடியாது. குளுக்கோஸ் மூளையின் முதன்மை எரிபொருள் என்று அழைக்கப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த ஆய்வின்படி, காலை உணவை தவிர்ப்பது மூளையின் ஆரோக்கியத்தில் சில நீண்டகால எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களை சில சிறப்பு நிபந்தனைகளை உருவாக்கி இரண்டு குழுக்களாகப் பிரித்தனர். அப்போதுதான் காலை உணவை தவிர்ப்பவர்களை காலை உணவு உண்பவர்களுடன் ஒப்பிடலாம்.
இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பங்கேற்பாளர்களின் எம்ஆர்ஐ பதிவு செய்யப்பட்டது. அதில் காலை உணவு உட்கொள்ளாதவர்களின் மூளை சுருங்குவதை கண்டுபிடிக்க முடிந்தது. இது டிமென்ஷியா அறிகுறிகளுடன் தொடர்புடையது. இது தவிர, இரத்தப் பரிசோதனைகளும் அவர்களுக்கு செய்யப்பட்டன. அவற்றில் சில நியூரோ டிஜெனரேஷன் பயோமார்க்ஸர்களின் அளவு காலை உணவைத் தவிர்க்காதவர்களை விட அதிகமாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், டிமென்ஷியாவை தவிர்க்க காலை உணவை தவறாமல் சாப்பிடுவது அவசியம். எனினும், காலை உணவு அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan