Paristamil Navigation Paristamil advert login

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றின் முன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க மறுத்த டயானா

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றின் முன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க மறுத்த டயானா

28 புரட்டாசி 2024 சனி 09:38 | பார்வைகள் : 6933


உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக விளங்கிய பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றின் முன் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க மறுத்தாராம் பிரித்தானிய இளவரசி டயானா.

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக விளங்கிய பிரமிடுகளின் முன்னால் நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க மறுத்துள்ளார் டயானா.

அந்த புகைப்படம் போர் அடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும், தான் அந்த புகைப்படத்தில் அபத்தமாக தெரிவேன் என்றும் கூறினாராம் டயானா.

அப்போது அந்த புகைப்படத்தை எடுக்க முயன்ற புகைப்படக்கலைஞர், டயானா அவர்களே, நீங்கள் நிற்பது உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிட் ஒன்றின் முன்.

நீங்களோ, உலகின் எட்டாவது அதிசயம், புகைப்படம் எப்படி நன்றாக இருக்காது? நாம் புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டாராம்.

சிரித்துக்கொண்டே, இப்படி ஒரு கோரிக்கையை எப்படி நான் மறுப்பேன் என்று கூறிய டயானா, உடனே புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தாராம்,

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026