Paristamil Navigation Paristamil advert login

வவுனியா மர்ம நபர்களின் வாள்வெட்டுத்தாக்குதலில் 4 பேர் படுகாயம்

வவுனியா மர்ம நபர்களின் வாள்வெட்டுத்தாக்குதலில் 4 பேர் படுகாயம்

16 ஆவணி 2024 வெள்ளி 11:27 | பார்வைகள் : 5388


இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத்தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்த நிலையில்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் , வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் வௌ்ளிக்கிழமை  பகுதியில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்… 

இன்றையதினம் அதிகாலை குறித்தவீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த சமயம் இனம்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுளைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வீட்டில்இருந்த முதியவர்களான ஐயர் மற்றும் அவரதுமனைவி வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்த மூவர்செட்டிகுளம் பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளநிலையில் பறயநாலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்