Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனின் இரண்டு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைனின் இரண்டு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா

2 ஆடி 2024 செவ்வாய் 09:35 | பார்வைகள் : 7007


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய பல மாதங்களாக போர் தொடுத்து வருகின்றது.

உக்ரைனின் இரண்டு கிராமங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்பிர்ன் மற்றும் நோவோலெக்சாண்டிவ்கா கிராமங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இதற்கு உக்ரைன்ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.


மேலும் கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகரான கார்கிவ் மீது ரஷியா தனது தாக்குதலை வலுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்