Normandie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு! - 43,000 படையினர் பாதுகாப்பு பணியில்..!
30 வைகாசி 2024 வியாழன் 15:50 | பார்வைகள் : 20781
Normandie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வின் போது நாடு முழுவதும் காவல்துறையினர், ஜொந்தாமினர், இராணுவத்தினர் என மொத்தமாக 43,000 வீரர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 80 ஆவது ஆண்டு நினைவு நாள், வரும் ஜூன் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளின் போது கிட்டத்தட்ட 25 ஜனாதிபதிகள் பிரான்சுக்கு வருகை தர உள்ளதாக அறிய முடிகிறது. அதையடுத்து உச்சக்கட்ட பாதுகாப்பின் கீழ் நாடு கொண்டுவரப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin இன்று மே 30 ஆம் திகதி அறிவித்தார்.
இந்த நினைவு நாள் கொண்டாட்டத்தைக் காண, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வருகைதரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan