பறவைக் காய்ச்சல் பரவல் - இலங்கையின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

24 ஆனி 2024 திங்கள் 15:42 | பார்வைகள் : 6114
உலகின் சில நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோயால், இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லையென சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பறவைக் காய்ச்சல் தொடர்பான அபாயகரமான சூழல் இல்லையென்றாலும் இது குறித்து அவதானமாக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இலங்கை மக்களுக்கு இந்த வகையான நோய் ஆபத்து இல்லை என்பதை நாம் சொல்ல வேண்டும். உலக சுகாதார நிறுவனம் எங்களுக்கு எந்த சிறப்பு எச்சரிக்கையையும் வழங்கவில்லை. பறவைக் காய்ச்சல் நிலைமை உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கு முன்பு பதிவாகிய போதும், அது தீவிரமாக பரவவில்லை.
எனவே, இவ்விடயடம் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்” என்றார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1