பெண்ணை தாக்கி, அச்சுறுத்தி சொத்துக்களை கொள்ளை
12 சித்திரை 2024 வெள்ளி 16:48 | பார்வைகள் : 6469
வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரைத் தாக்கி அங்கிருந்த பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்ற குழுவினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி இரவு வேளையில் அலவாக்கும்புர பிரதேசத்திலுள்ள வீட்டினுள் நுழைந்த குழுவொன்று அங்கிருந்த பெண்ணை அச்சுறுத்தி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றபோது வீட்டின் உரிமையாளரின் மனைவி மாத்திரமே அங்கிருந்த நிலையில் கொள்ளையர்கள் அவரை தாக்கி அச்சுறுத்தி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வெள்ளை நிற வேனொன்றில் வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட சிலர் அடங்கிய கும்பலே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, மஹியங்கனை பொலிஸார் சந்தேக நபர்களை வீதித்தடையில் வைத்து சோதனையிட்டபோது சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கொள்ளைச் சம்பவம் தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan