மெக்ஸிக்கோ பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து தாக்குதல்! இருவர் பலி

7 பங்குனி 2024 வியாழன் 09:07 | பார்வைகள் : 13087
மெக்ஸிக்கோ பல்கலைக்கழகத்தில் இளைஞனொருவன் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
குவாதலாஹாரா நகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் புதன்கிழமை 06 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 வயதான ஓர் இளைஞனே தாக்குதல் நடத்தியதாகவும், அவ்விளைஞனும் இச்சம்பவத்தில காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை என ஜாலிஸ்கோ மாநில வழக்குத்தொடுநர் கூறியுள்ளார்.
சந்தேக நபரான இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1