கனடாவில் முதல் தடவை வீடு கொள்வனவு செய்வோருக்கு அதிர்ச்சி தகவல்

4 பங்குனி 2024 திங்கள் 15:49 | பார்வைகள் : 9381
கனடாவில் முதன் முதலாக வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறை வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்குவிப்பு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடகுக்கடன் மற்றும் வீடமைப்பு கூட்டுத்தாபனம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி நள்ளிரவு வரையில் இந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக வீடு கொள்வனவு செய்வோரை ஊக்குவிக்கு;ம நோக்கில் கடந்த 2019ம் ஆண்டில் இந்த திட்டம் அறிமுகம் செய்பய்பட்டிருந்தது.
முதல் தடவை வீடு கொள்வனவு செய்வோரின் அடகுக் கடன் வட்டி வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
வீடு கொள்வனவு செய்யப்பட்ட தொகையில் 10 வீதமான தொகையை அரசாங்கம் கடனாக வழங்கியுள்ளது.
இந்த தொகையை 25 ஆண்டுகளில் செலுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் காரணமாக அநேகமானவர்களினால் இந்த சலுகையை பெற்றுக்கொள்ள முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1