ஜெயிலர் 2 : கதை எழுதி வரும் நெல்சன்?
24 மாசி 2024 சனி 08:39 | பார்வைகள் : 6534
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த வருடம் வெளியாகி 600 கோடி வசூலைக் குவித்த படம் ஜெயிலர். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே ஒரு தகவல் இருந்தது. அந்தத் தகவல் உண்மைதான் என தற்போது தெரிய வந்துள்ளது. அப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த மிர்னா இது பற்றிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சனுடன் பேசியதாகவும், அப்போது நெல்சன் ஜெயிலர் 2 படத்திற்கான கதையை எழுதி வருவதாக சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் தன்னுடைய கதாபாத்திரம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது இயக்குனரின் முடிவு சார்ந்த ஒரு விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அப்படம் முடிந்தபின் ரஜினியின் 172வது படமாக ஜெயிலர் 2 படம் உருவாகலாம்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan