Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமுலாகும் புதிய நடைமுறை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமுலாகும் புதிய நடைமுறை!

6 தை 2024 சனி 14:41 | பார்வைகள் : 7774


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் வரும்போது அல்லது வெளியேறும்போது அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்