Paristamil Navigation Paristamil advert login

புயல்! - மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

புயல்! - மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

30 மார்கழி 2023 சனி 14:18 | பார்வைகள் : 21745


கடும் புயல் காரணமாக இன்று சனிக்கிழமை இரவு பிரான்சின் மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Côtes-d'Armor,

Finistère,

Morbihan

ஆகிய மூன்று மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு மணிக்கு 90 முதல் 120 கி. மீ வரையான வேகத்தில் புயல் வீசும் எனவும், மரங்கள் முறியும் அபாயம் இருப்பதால், வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குறித்த மூன்று மாவட்டங்களுக்கும் இன்று இரவு 9 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை வரை ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.