பிரான்ஸ் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுததுள்ள சிறிலங்கா ஜனாதிபதி
2 மார்கழி 2023 சனி 10:38 | பார்வைகள் : 14076
பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒன்றுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனுக்கு அழைப்பு விடுத்தார்.
இலங்கையில் காலநிலை தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
COP 28 மாநாட்டுக்கு இணையாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பு சற்று முன்னர் நடைபெற்றது.
இலங்கையின் பசுமை பொருளாதார மாற்றம் மற்றும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA உடனான பிரான்ஸின் தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan