பிரான்சில் தொடர்ந்தும் அதிகரித்து செல்லும் குடும்ப வன்முறையாகள். உள்துறை அமைச்சு.

16 கார்த்திகை 2023 வியாழன் 11:12 | பார்வைகள் : 8358
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் குடும்ப வன்முறைகள் அதிகரித்து செல்கிறது. 2022ல் சுமார் 244 000 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளது.
மேற்குறிப்பிட்ட தொகை 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15% சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பாகியுள்ளது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுபவர்களில் நான்கில் ஒருவரே காவல்நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். பெரும்பாலும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவது பெண்கள், பாதிக்கப்பட்ட நபர்களில் 87% சதவீதம் பெண்களும், குற்றம் சுமத்தப்பட்டவர்களில் 89% சதவீதம் ஆண்களும் அடங்குகின்றனர்.
வன்முறைகளில் உடலியல், வாய்மொழி வன்முறைகள் 30% சதவீதமும், உளவியல், பாலியல் வன்முறைகள் 13% சதவீதம் இடம்பெறுகிறது. பிரான்ஸ் முழுவதும் குடும்ப வன்முறைகள் பதிவானாலும், குறிப்பாக Seine-Saint-Denis, la Guyane, Pas-de-Calais, le Nord மற்றும் La Réunion ஆகிய பகுதிகளிலேயே மிக மோசமான அதே நேரத்தில் அதிகமான குடும்ப வன்முறைகள் இடம்பெறுகின்றன. குடும்ப வன்முறை பெரும்பாலும் 15 வயது முதல் 64, 65 வயது வரை நடைபெறுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1