இலங்கையில் அடுத்த ஆண்டு முதல் பெட்ரோல்-டீசலுக்கு 10% வரி!

12 கார்த்திகை 2023 ஞாயிறு 12:20 | பார்வைகள் : 5900
இலங்கையில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1 முதல் பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி மீது வற் வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை 10% அதிகரிக்கலாம் என்று சமீபத்தில் நடைபெற்ற அரசு நிதித்துறைக்கான பாராளுமன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்த அரசாங்க வருமான இலக்குகளை எட்ட முடியாமல் போனதன் காரணமாக அடுத்த வருடம் (2024) முதல் VAT வரியை 18% ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தது.
எவ்வாறாயினும், மண்ணெண்ணெய்க்கு இந்த வரி அறவிடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் “கோப்” குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இந்த பிரேரணையை எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு அனுப்புவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1